இஸ்மத் சுக்தாய் கதைகள்

இஸ்மத் சுக்தாய் கதைகள்,-தமிழில்: ஜி.விஜயபத்மா, எதிர் வெளியீடு, பக்.496, விலை ரூ.500.

உருது இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை விதைத்த பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் படைப்பில் வெளியான 24 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். வறுமையை மட்டுமே வாழ்க்கையில் சொத்தாகக் கிடைக்கப் பெற்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சில பெண்களின் வலிகளும், வேதனைகளும்தான் பெரும்பாலான கதைகளின் கருப்பொருள்.

முகத்தை திரையிட்டு மறைத்து வாழும் எத்தனையோ பெண்களின் அகத்துக்குள் நடக்கும் அக்னி பிரவேசங்களை எழுத்தினூடே அழுத்தமாகக் கூறியிருக்கிறார் சுக்தாய். போர்வை என்றொரு கதையில், கணவரின் அன்பும், தாம்பத்யமும் கிடைக்காத ஒரு பெண், உளவியல்ரீதியாகவும், வாழ்வியல்ரீதியாகவும் அடையும் விசித்திரமான மாற்றங்கள் விரசமின்றி விவரிக்கப்பட்டுள்ளன. அதை ஒரு சிறுமியின் பார்வையில் பதிவு செய்திருப்பது வித்தியாசமான கோணம்.

திருமண உடை என்ற கதையில் தனது மகளின் கல்யாணத்துக்காக அழகான ஆடை ஒன்றைத் தைத்து வைக்கிறார் அவரது தாய். இறுதிவரை அப்பெண்ணுக்கு திருமணமும் ஆகவில்லை. அந்த உடையும் உபயோகப்படுத்தப்படவில்லை. அந்த ரணங்கள் அனைத்தையும் எழுத்தின் வாயிலாக கடத்துகிறார் நூலாசிரியர்.

நன்றி: தினமணி,23/7/2018

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *