ஏன் என்னைக் கொல்கிறீர்கள்

ஏன் என்னைக் கொல்கிறீர்கள், க. இராமசாமி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 72, விலை 60ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-9.html கவிஞர் க. இராமசாமி இணையத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ஏன் என்னை கொல்கிறீர்கள்?. நவீன வாழ்க்கை மனிதர்களை இடம் மாற்றிக்கொண்டே உள்ளது. குறிப்பாக கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு இப்படி நகரங்களின் இடுக்குகளில் வாழ நேர்ந்துவிட்ட மனிதர்களின் கனவுகள், ஆசைகள், தனிமையின் துயரங்கள், பால்ய கால நினைவுகள், பொய்யான சுகங்கள், காணாமல் போன முரட்டுத்தனமான அன்புகள், அன்பற்றவர்களின் துரோகங்கள், குரூரங்கள், மரணங்கள், வெறுமையான பொழுதுகள், வறுமையின் வடிவங்கள், தாம்பத்தியத்தின் இன்பமான கணங்கள், குழந்தைகள், போலிகள், கொடுமைகள், நட்புகள், தியாகங்கள் என அனைத்தையும் தன் கவிதைகளில் பதிவு செய்துள்ளார். ஒரு வாசகன் படைப்பாளியாக மாற இணையம் பேரூதவியாக உள்ளது. அதை சரியான வகையில் பயன்படுத்தினால் நல் இலக்கியமும் பிறக்கும் என்பதற்கு க. இராமசாமி முன்னுதாரணமாக உள்ளார். நன்றி: புதிய தரிசனம், 1/6/2014.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *