மானுடப்பண்ணை

மானுடப்பண்ணை, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 130ரூ.

வேலை இல்லாத, கிடைக்காத, கிடைத்தாலும் தகுதிக்கேற்ப சம்பளம் வரப்பெறாத இளைஞர்கள், இந்தத் தேசத்தில், தெரு நாய்களைப் போல வாழச் சபிக்கப்பட்டவர்கள். இந்த துருப்பிடிக்கும் இளமையாளர்கள் பற்றிய சரியான சமூகக் கவலையே இந்த நாவல். கதாநாயகனை பெரியாரியத்தின் பக்கம் இழுக்கும் பாலகிருஷ்ணன். காதல் பக்கம் தள்ளும் நீலா, மார்க்சியத்தில் பக்கம் வசீகரிக்கும் தோழர், மண்ணின் மைந்தர் தண்டபாணி ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்கள். வேலையில்லாத இளைஞன் மன உளைச்சல், குடும்ப உறவு, காதல், வேலை வாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தையும் உணர்வுப்பூர்வமாக படைத்து வெற்றி பெற்றிருக்கிறார் நூலாசிரியர் தமிழ்மகன். நன்றி: தினத்தந்தி, 11/3/2015.  

—-

திருக்குறள் அறு சொல் உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.

திருக்குறளுக்கு புகழ் பெற்ற பழைய உரைகளுடன் புதிய உரைகள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு அடிகளில் உள்ள குறள்களுக்கு ஆறு சொற்களில் உரை எழுதியுள்ளார் பேராசிரியர் வெ. அரங்கராசன். எளிய இனிய சொற்கள். எனவே உரை ‘சட்’டென்று மனதில் பதிகிறது. பாராட்ட வேண்டிய முயற்சி. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *