மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறைப் பதிப்பகம், சென்னை.

தமிழ் இதழ்களில் தற்போது தனிப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும்போக்கு அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் புதிய தலைமுறை இதழில் ஆத்மார்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மனக்குகை சித்திரங்கள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. நூல்கள் விற்கும் ஆறுமுகம், சாலையில் ஓவியம் வரைபவன், மனநோய் பாதிப்புக்குள்ளான மல்லிகா அக்கா, உறவினர் யாரும் இல்லாதபோதும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாலமூர்த்தி, நான்குவயதில் தொலைந்துபோன குட்டிமகள் இன்னும் தன்னுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் பெரியவர், மதுக்கூடத்தில் பாடும் ராமசாமி உள்ளிட்ட பல பாத்திரங்களின் உணர்வுகளை நூல்முழுக்க ஒரு பார்வையாளனாக நின்று நல்லதொரு மொழியில் பதிவு செய்கிறார் ஆத்மார்த்தி. யார்மீதும் ஆத்மார்த்தி நமக்கு கோபத்தை வரவழைப்பதில்லை. வாழ்தல் இனிதிலும் இனிது என்ற உணர்வைக் கொண்டுவர முயற்சி செய்யும் நூல். நன்றி: அந்திமழை, 5/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *