மணிக்கொடி

மணிக்கொடி, சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 500ரூ.

கல்கியின் பொன்விழாப் போட்யில் முதல் பரிசு பெற்ற நாவல் இது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது எனும் உயரிய கருத்துக்கு முழு வடிவம் கொடுத்து உருவான நாவல். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்று புதினத்தை படைத்திருக்கிறார் நேதிர்லதா கிரிஜா. இப்புதினம், விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் வலியை இன்றைய தலைமுறையினர் உணர்வதற்கும், அவர்களின் சீரிய வாழ்க்கை முறையை அறிந்துகொள்வதற்கும் பேருதவியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.  

—-

 

நினைவாற்றல் பெற நவீன முறை மனப்பயிற்சிகள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.

நம் அனைவருக்கும் ஞாபக சக்தி மிக அவசியம், நினைவாற்றல் இல்லை என்றால் வாழ்க்கையே பிரச்சினைதான். நினைவாற்றலை பெருக்கிக்கொள்ள நவீன பயிற்சிகளை இந்நூலில் கூறுகிறார் ஆசிரியர் ஜே.எஸ். ஏப்ரகாம். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *