மனவளர்ச்சி குன்றுதல்
மனவளர்ச்சி குன்றுதல், ந. செந்தில் குமார், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 204, விலை 130ரூ.
மனவளர்ச்சிக் குறைபாடு வேறு; மனநலக் குறைபாடு வேறு என்பதை ஆசிரியர் நூலின் ஆரம்பத்திலேயே விளக்கிவிடுகிறார். மனவளர்ச்சிக் குறைபாடு என்பது முழுக்க முழுக்க மூளையின் செயல்பாடுகளில் உண்டாகும் குறைபாடாகும். இந்த அடிப்படையில் மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கான பல்வேறு காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து 5 வயது வரை ஒவ்வொரு வயதிலும் என்னென்ன வளர்ச்சிப் படிநிலைகளை அடையுமோ, அவற்றை அடையாவிட்டால் அக்குழந்தை மனவளர்ச்சிக் குறைபாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். மூளை முடக்குவாதத்தால் ஏற்படும் மன வளர்ச்சிக் குறைபாடுகளைப் பற்றி இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டால் அதை அவர்கள் உணர முடியாது. தன் உடலில் நிகழும் மாற்றங்களைப் பிறரிடம் சொல்லத் தெரியாது என்று கூறம் நூலாசிரியர், இந்தக் குழந்தைகளை நரம்பியல் மருத்துவரின் கண்காணிப்பில் எப்போதும் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். மனவளர்ச்சிக் குறைபாட்டு நோயின் முதல் நாடி அதைத் தணிக்கும் பல்வேறு வழிமுறைகளையும் தெளிவாகக் கூறும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 9/3/2015.