அரவு

அரவு, சசிகலா தளபதி விஜயராஜா, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.125 இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் சசிகலா, கரோனா ஊரடங்குக் காலத்தில் எழுதிய நாவல். குடும்பத்தையும் உறவுகளையும் அடிப்படையாகக் கொண்ட கதையில் சமூகநீதி, சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிப்பது, பெண்ணுரிமைக்குக் குரல்கொடுப்பது என முற்போக்கான கருத்துகளைக் கதாபாத்திரங்களின் வழியாக எதிரொலிக்க வைத்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033289_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும், ந.அறிவரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.236, விலை ரூ.200. சங்கப் பாடல்களில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர்தான். அவர் தம்முடைய பாடல்களில் இயற்கை சூழல், இயற்கைக் காட்சிகள், இயற்கையோடு இயைந்த மக்களின் வாழ்க்கைமுறை போன்றவற்றையே பெரிதும் காட்சிப்படுத்துவார். குறிஞ்சிக் கபிலரான அவரை, “இயற்கைக் கவிஞர்’ என்றும் போற்றலாம் என்கிறது இந்நூல். கபிலரின் இயற்கையோடு இயைந்த வாழ்வு, கபிலரின் படைப்பும் பாடுபொருளும், கபிலரின் பாடல்களில் மொழிநடை ஆகிய மூன்று உட்தலைப்புகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். முதல் பகுதியில் கபிலரின் பிறப்பு, குலம், பெயர்க் […]

Read more

எங்கேயும் பெண்மை

எங்கேயும் பெண்மை, மு.வேல்முருகன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 55ரூ. ‘காப்பியப் பொருளாய் பெண்ணிருந்தாள் கவிதைப் பொருளும் அவளானாள் – இன்று கோப்பியப் பொருளாய் ஆகிவிட்ட பெண்ணின் அவலம் அறிவீரோ? அழகுச் சிலையைப் பின்தொடர்ந்து காதல் மொழிகள் கூறுகிறார்; அவள் அதை ஏற்க மறுத்தாலோ அமிலத்தை முகத்தில் வீசுகிறார்’ என்ற கவிதை வரிகள், பெண்ணின் அவலத்தைக் கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர்17/9/2017.

Read more

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்)

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்), தொகுப்பாசிரியர்கள் : சு.சந்திரா, ரா.கவிதா, த.சுதந்திரமணி, பாவை பப்ளிகேஷன்ஸ்,  பக்.1208, விலைரூ.900. மதுரையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை இரு தொகுப்பு நூல்களாக்கி வெளியிட்டுள்ளனர். கற்காலம் முதல் தற்காலம் வரை மதுரையின் வரலாறு, கலை, பண்பாடு, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் தொகுப்பில் ‘வரலாற்றுச் சிறப்பில் மதுரை39‘ […]

Read more

வெற்றிச் சிம்மாசனம்

வெற்றிச் சிம்மாசனம், ப. ஜான் கணேஷ், தி ஒரிஜினல்பிரிண்டிங் பிரஸ், விலை 60ரூ. “நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை அர்த்தப்படும், யோசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை வசப்படும்” என்பார்கள். அதுபோல வாழ்க்கை வசப்படவும், வெற்றி நிசப்படவும் வழிகாட்டிடும் புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- கார்ல் மார்க்ஸ், வெ. சாமிநாத சர்மா, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், மார்க்சியத்தைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் தமிழக மக்கள் அறிந்து […]

Read more

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர்

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 220ரூ. வரலாற்றில் மகளிரையும், மகளிரின் வரலாற்றையும் வெளிக்கொணரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி நூலாகும். தொடக்க காலத்திலிருந்து தமிழக மகளிர், சமூக சீர்திருத்தங்களும் மகளிர் இயக்கங்களும், மகளிர் கல்வி, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – தன்னாட்சி இயக்கம் வரை, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – காந்தியின் காலம், பெண்களும் வாக்குரிமை இயக்கமும், பெண்களின் ஆரோக்கிய நல முன்னேற்றம் ஆகிய ஏழு தலைப்பின் கீழ் சங்க காலம் முதல் 1947 வரையிலான நிகழ்வுகளை சான்றுகளின் […]

Read more

தமிழர் சமூக வாழ்வு

தமிழர் சமூக வாழ்வு, இர. ஆலாலசுந்தரம், தமிழில் ம. இளங்கோவன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 260ரூ. தமிழர்களின் மூத்த குடிகள் – மூதாதையர் பற்றிய அடையாளங்களை இந்த நூல் வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில் பல அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- 1000 செய்திகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. பட அதிபர் “முக்தா” சீனிவாசன், 1000 செய்திகளை (தகவல்கள்) தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டு, ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். 2-வது, 3-வது , […]

Read more

ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம்

ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம், செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 142, விலை 90ரூ. சமகால வரலாற்று ஆவணம்! திருவையாறு எனும் ஊரில் பிறந்து, பள்ளி ஆசிரியராக நுழைந்து, கல்லூரி ஆசிரியராக உயர்ந்து, ஐந்து பேரை இணைத்துக்கொண்டு, 1878ல் ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பத்திரிகை துவங்கி, 1882ல் ‘சுதேச மித்திரன்’தமிழ் பத்திரிகை துவங்கி, விடுதலைப் போருக்கு உழைத்த தியாகி ஜி. சுப்பிரமணிய ஐயரின் வரலாற்று நூல் இது. இதில் சிறப்பு என்னவென்றால், அவர் வாழ்ந்த காலத்திலேயே, 1907ம் ஆண்டில், குருமலை சுந்தரம் பிள்ளை என்பவர், […]

Read more

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 244, விலை 170ரூ. எதிர்ப்பு நிலையும் இருப்பு நிலையும் ஆய்வேடுகள் வெகுமக்களால் படிக்கப்படும் நூலாக வெளிவருவது அரிது. எழுதியவரையும் விடை மதிப்பீட்டாளரையும் மிக இம்சிக்கும் ஆற்றலுடைய ஆய்வேடுகள், அப்படிக் காணாமற்போதல் காலவிதி. ஆனால், ஜோஸ்பின் மேரி வழங்கியிருக்கும் இந்த ஆய்வேடு படிக்க தூண்டுவதாகவும் பொருண்மை உடையதாகவும் இருக்கிறது. அயோத்தி தாச பண்டிதர் காலத்திலேயே அடியரம் இடப்பட்ட தலித் தொடர்ச்சியானது, 20ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வீறார்ந்து செயல்பட்டதை, நுண்மையாக அகலத்தோடும் […]

Read more

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம்

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம், குருமலை சுந்தரம் பிள்ளை, பதிப்பாசிரியர் செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 124, விலை 90ரூ. புதிய விழிப்பின் ஆதின கர்த்தர்களில் ஒருவர் என்று பாரதியால் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். ஒரே நேரத்தில் அரசியல், சமூக சீர்திருத்தம், இதழியல் என பல நிலைகளில் செயல்பட்ட முன்னோடி. சமூக சீர்திருத்தத்தை வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, நடைமுறை வாழவிலும் கடைப்பிடித்தவர். மூத்த மகள் தம் பன்னிரண்டாவது வயதில் கணவனையிழக்க அதே ஆண்டின் இறுதியில் அப்பெண்ணுக்கு அவர் மறுமணம் செய்து […]

Read more
1 2 3 7