கம்பனின் அரசியல் கூட்டணி
கம்பனின் அரசியல் கூட்டணி, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ.
கடந்த காலத்தில் படைக்கப்பட்ட ஓர் இலக்கியம், நிகழ்காலத்தில் எப்படிப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்நூல். கிஸ்கிந்தாவில் சுக்கிருவனின் உதவியை ராமன் நாடவேண்டி வருகிறது.
ஏனெனில் சீதையைக் கவர்ந்து சென்றவன் ராவணன் என்பதைத் தெரிந்து கொண்டபின், தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவும், துயரில் சிக்கிவிட்ட மனையாளை மீட்கவும், வலிமை மிக்க, வரபலம், படைபலம், தம்பியர் துணை, ஆட்சி அதிகாரம் கொண்டுள்ள ராவணனை எதிர்க்க இருவரின் வில்கள் மட்டுமே போதாது என்பதை, அவதாரமாக நம்பப்பட்ட ராமனே உணர்ந்து அங்கீகரிக்க வேண்டி வருகிறது.
ஆட்சியை இழந்தபின் அரசியல் கட்சித் தலைவர்கள், இவ்வாறுதான் துணை தேடுவார்கள். அரசியல் கூட்டணி சகாப்தம் என தற்கால அரசியல் சூல் வருணிக்கப்படுகிறது. இக்கூட்டணி அமைப்பு மகாபாரதத்திலும் வருகிறது. ராமாயணத்திலும் வருகிறது. இது கம்பபனின் படைப்பில் இன்றைய நிகழ்வு உணர்வோடு நூலாசிரியர் தா. பாண்டியனின் தமிழ்த் திறனாய்வின் வளர்ச்சியைக் காட்டுகின்றது.
நன்றி: தினத்தந்தி, 30/3/2016.