தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு
தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு, சைதை முரளி, ஆரம் வெளியீடு, விலை 100ரூ.
‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்பர். ஆனால் ‘ஏட்டுச் சுவடி தமிழுக்கு உதவும்’ என்பதை, கரையிலா இந்தச் சமுத்திரத்தில் நீந்தித் திளைத்து நம் தமிழின் பெருமையை மீட்டெடுத்து, எட்டுத் திக்கும் பரப்பியவர் “தமிழ்த்தாத்தா” உ.வே. சாமிநாதய்யர்.
தமிழுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட கொடையாளர். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தாத்தாவின் உயர்ந்த தமிழ் பணிகள் பற்றியும், அவரது வாழ்க்கை பற்றியும் பல்வேறு தகவல்கள் திரட்டி விறுவிறுப்பாக படிக்கும்வகையில் தெளிந்த நடையில் எழுதியிருக்கிறார் சைதை முரளி. நூலைப் படிக்கும்போது பல செய்திகள் புருவத்தை உயர்த்துவனதாக உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.