மாலைகள்

மாலைகள், போந்தூர் கனகசுந்தரம், மேன்மை வெளியீடு, விலை 170ரூ.

மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்ட திருநங்கைகள் பற்றிய சமூகப் பார்வைகள் இன்னும் பெரிதாக மாறிவிடவில்லை. மிகை அலங்காரத்தோடு நின்றபடி, சாலையில் செல்வோரிடம் கைதட்டிக் காசு கேட்பவர்கள் என்கிற ஒற்றைப் புரிதலிலிருந்து நாம் முதலில் விடுபட்டாக வேண்டும்.

சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’, திருநங்கைகளின் வாழ்வை இலக்கிய வெளியில் பரவலான பேசுபொருளாக மாற்றிய நாவல். போராட்டக் களத்திலிருந்து வேர்பிடித்துக் கிளம்பி, திருநங்கைகளின் மீதான வெற்று கரிசனங்களைப் புறந்தள்ளி, ஒழுங்கற்ற சமூக அமைப்பை ஒருங்கிணைக்கும் நோக்கத்தைத் திருநங்கைகள் வாழ்வின் வழியாக முன்மொழிந்துள்ள எழுத்தாக இந்நாவல் கவனம் பெறுகிறது.

நன்றி: தி இந்து, 7/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *