சிவகங்கைச் சரித்திரக் கும்மி

சிவகங்கைச் சரித்திரக் கும்மி, முனைவர் ஆ.மணி, காவ்யா, விலை 750ரூ.

இந்திய மண்ணில் வெள்ளையர்களின் ஆதிக்கத்தைக் கண்டு பொறுக்காமல், விடுதலைக்காக போராடியவர்களில் முன்னோடியானவர் மருதுபாண்டியர். முக்குளத்தில் பிறந்து, சிவகங்கைக்கு வந்த மருது சகோதரர்கள் வேலு நாச்சியாருக்கு உறுதுணையாக இருந்து, அவரை ராணியாக அரியணையில் ஏற்றி, தளபதியாகவும் அமைச்சராகவும் இருந்தனர்.

அரசியல் மோதலினால் 1799ல் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு, 1801-ல் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கும்மிப் பாடல்களாக மக்கள் கொண்டாடினார்கள். அவ்வகையில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிவகங்கை சரித்திரக்கும்மியை 63 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் மறுஅச்சாக்கம் செய்திருப்பது வரலாற்றை ஆவணப்படுத்தும் நல்முயற்சி.

நன்றி: தி இந்து, 7/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *