எங்கேயும் எபோதும்

எங்கேயும் எபோதும், பொள்ளாச்சி அபி, ஒரு துளிக்கவிதை வெளியீடு, விலை 160ரூ.

ஊடகவியலாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய எழுத்தாளர் அபியின் சிறியதும் பெரியதுமான 27 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பிது.

‘நேத்து சாயங்காலம் நான் ரெண்டு பேரைக் கொன்னுட்டேன்னு சொன்னா உனக்கு ஆச்சரியமா இருக்கும்… சார்’ என்று மெல்லிய அதிர்வோடு தொடங்கும் ‘நீயே சொல்லு சார்’ கதையாகட்டும். ‘ஏய்… சரசு… மின்னல் வெட்றாப்புலே இருக்குது’ என்று இரைச்சலான அழைப்போடு தொடங்கும் ‘ஒரு ஊருல ஒரு இராஜகுமாரி’ கதையாகட்டும், எல்லாக் கதைகளிலுமே வற்றிப் போகாத நம்பிக்கை சுரந்துகொண்டேயிருக்கிறது.

சமகால அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் ‘நமக்கும் தெரிந்த முகங்கள்’ கதைக்காகவே இவரைப் பாராட்டலாம்.

நன்றி: தி இந்து, 7/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *