தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 5

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 5, தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 440ரூ.

மர்மக் கதை மன்னர் தமிழ்வாணன் எழுதிய மர்ம நாவல்கள் தொகுப்பின் 5-ம் பாகமாக வெளியாகி உள்ள இந்த நூலில், 5 பெரும் நாவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்வாணனின் ஆகச் சிறந்த மர்ம நாவல்களில் ஒன்றான ‘கருநாகம்‘ என்ற திகில் நாவல், ஏராளமான மர்மங்களும், எதிர்பாராத திடீர் திருப்பங்களும் கொண்டு தனித்துவம் பெற்று இருக்கிறது.

ஓரே மூச்சில் படித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இநத் நாவலை தமிழ்வாணன் படைத்து இருக்கிறார். மர்ம முடிச்சு சம்பவங்கள், குழப்பம் இல்லாமல் படிக்கும் வகையில் அமைந்துள்ளன. அதுபோலவே, இந்த நூலில் இடம்பிடித்துள்ள மற்ற 4 நாவல்களும் சமூக நாவலுக்கு உரிய தன்மையுடனும், விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டு இருக்கின்றன.

நன்றி: தினத்தந்தி, 22/11/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

நன்றி: தினத்தந்தி, 22/11/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *