மகிழ்ச்சிச் சிறகுகள்

மகிழ்ச்சிச் சிறகுகள், முனைவர் இளசை சுந்தரம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.270

‘தினமலர்’ நாளிதழில் வெளியான ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். அண்மையில் மறைந்த எழுத்தாளர் இளசை சுந்தரத்தின் கடைசி நுால்.

முன்னுரையிலேயே ‘நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை விதைக்கிறார். காலம் எனும் சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் நாம் சிற்பமா… இல்லை சிதறி விழும் கற்களா? சிற்பமாக வேண்டுமானால் சாதனை செய்ய வேண்டும். பூமியை படுக்கையாக்குவதும், பாதையாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

எல்லா பறவைகளுக்கும் உணவை படைத்துஇருக்கிறான் இறைவன். ஆனால் கூடுகளுக்கு வந்து கொடுப்பதில்லை. பறவைகள் தேடிச் சென்று தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அது போல தேடிப் பெற வேண்டும் என எடுத்துக் கூறுகிறார்.

முயற்சியின் விதைகள் முளைக்கத் துவங்கிவிட்டால், வெற்றியின் விளைச்சல் நிச்சயம் உண்டு எனும் வைர வரிகளால், உற்சாகம் எனும் அருமருந்தை ஊட்டுகிறார். மனோபலம், நம்மால் முடியும் எனும் நம்பிக்கை, நேர நிர்வாகம், உற்று கவனித்தல், எதையும் முழுமையாக செய்தல், மனச்சோர்வு நீக்கும் வெற்றியாளர்களின் மந்திரச் சொற்கள் என சிந்தனை முத்துக்களால் தொகுக்கப்பட்ட களஞ்சியம்.
– ஆனந்தம்

நன்றி: தினமலர், 10/4/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *