அருள்மழை தாராயோ

அருள்மழை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 216, விலை 220ரூ.

இந்த எண்ணம் நமக்கும் அடிக்கடி வரும். கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழிபிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராதா என ஏங்கிக் கொண்டே செல்வர்.
ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமிக்கும் இந்த சிந்தனை வந்தது.

தாயே… மீனாட்சி… ஒரு நாளாவது நீயா சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டியா என, உள்ளுக்குள் கோபமும் சலுகையுமாய் கேட்க, மகனின் அசைவுக்கு இசையும் தாயாய், அர்ச்சகர் வடிவில் வந்து தரிசனத்துக்கு அழைத்துச் செல்கிறாள் தாய்.

எழுத்தாளராய், அறிவாளியாய், எஜமானனாய், இடத்துக்கு இடம் மனிதருக்கு மனிதர் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அன்னையின் முன், பிள்ளை தான். பித்தனாய், பிதற்றலாய், கதறி அழத் தான் முடியும். ஒருவாய் சோறுாட்டும் போது, கைவழி அமுதம் சுரந்து பிள்ளையின் வயிறை நிறைப்பது போல, ஆசிரியரின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அன்னையின் ஒவ்வொரு அசைவாய், ஆசிரியரை புரட்டி போடுகிறது.

இது தாய்க்கும், பிள்ளைக்குமான பந்தம். இந்த பந்தத்தை வெறும் வார்த்தைகளால் மதிப்புரை தர முடியாது; உள்ளார்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கு புத்தக வரிகளின் வழியே ஆசிரியரை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு வித்தியாசமான அனுபவம்.

– எம்.எம்.ஜெ.,

நன்றி: தினமலர், 9/8/20.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030637_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.