ஈர்ப்பின் பெருமலர்
ஈர்ப்பின் பெருமலர், எஸ்.சண்முகம், போதிவனம், விலை 120ரூ.
வாழ்வின் நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து சற்றே விலகிச் செல்லும் அகச் சொல்லாடலில் முகிழ்த்த கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு. எதையும் முழுமையாக சொல்லித் தீராத சொற்களிலிருந்து உயிர்க்கும் இக்கவிதைகளில் வெளிப்படும் இருண்மை மொழி வாசகனையும் அகவெழுச்சி கொள்ள வைக்கிறது.
‘காட்சியில் புதைந்திருக்கும் எல்லையின்மையோ
மின்னி மின்னி அழைக்கிறது
உடன் யாருமற்றிருக்கும் அத்தனியனை
-எனும் வரிகள், நம்மையும் உடன் அழைத்துக்கொள்ளும் கவி வரிகளாக உள்ளன.
நன்றி: தி இந்து, 12/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818