கவிதைச் சிறகுகள்
கவிதைச் சிறகுகள், வானதி பதிப்பகம், விலை 160ரூ.
கவிதை நாற்றுகள், கவிதை கீற்றுகள், கவிதை சிறகுகள், இலக்கிய ஆளுமைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் மோகன் படைத்துள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.
கவிஞர்கள் செல்லகணபதி, ரெ.முத்துக் கணேசன், பெ. சிதம்பரநாதன், பாரதி வசந்தன், இளசை சுந்தரம், துணை வட்டாட்சியர் பே.ராஜேந்திரன், கம்பதாசன் போன்றோரின் கவிதைகளில் உள்ள நயங்களை எடுத்துச் சொல்கிறார். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள், புதுக்கவிதையில் நிகழ்காலப் பதிவுகள் அருமை.
கவிஞர்களை மட்டுமல்ல இலக்கிய ஆளுமைகள் பற்றியும் இந்த நூலில் அவர் அழகுற எடுத்துக் கூறுகிறார். பேராசிரியர் மோகனின் நூல்கள் ஒவ்வொன்றும் தனித்த ஆய்வுக் கண்ணோட்டத்துடன் படைக்கப்பட்டவை. அந்த வகையில் இந்த நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு அறுசுவை உணவு.
நன்றி: தினத்தந்தி, 15/3/2017.