குழந்தைகளின் நூறு மொழிகள்

குழந்தைகளின் நூறு மொழிகள், ச. மாடசாமி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 80ரூ.

‘வகுப்பறையும் அறிவொளியும்தான் இந்தக் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன’ என்று சொல்லும் பேராசிரியர் ச.மாடசாமி, மொழி, பண்பாடு, கல்வி சார்ந்து எழுதிய 14 கட்டுரைகளின் தொகுப்பு.

எதையும் மேம்போக்காக அணுகாமல், கூர்ந்து கவனித்து எழுதும் கட்டுரையாளரின் நுட்பமான பார்வைக்கு இந்நூலின் கட்டுரைகளே சாட்சி. ஆழமான விஷயங்கள் கொண்ட கட்டுரைகள்கூடச் சட்டென முடிந்துவிடுகின்றன. வகுப்பறைக்குள்ளிருக்கும் அதிகாரம் பற்றிப் பேசும் கட்டுரையும், அகங்காரத் தமிழ் எனும் மொழியின் சமூகத் தேவை குறித்த அக்கறையுடன் கூடிய கட்டுரையும் மிகுந்த கவனிப்புக்குரியவை.

நன்றி: தி இந்து, 3/2/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *