மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில்
மகாபாரதம் மாறுபட்ட கோணத்தில், சுரானந்தா, சுரா பதிப்பகம், விலை 200ரூ.
இந்தப் புத்தகத்தை எழுதிய சுரானந்தா, உண்மையில் மகாபாரதத்தை நன்கு ஆராய்ந்து, புதிய கோணத்தில் எழுதியுள்ளார். இடையிடையே தன் கருத்துக்களையும் சொல்கிறார். இதில் பல புதிய தகவல்கள் அடங்கியுள்ளன.
சகுனி, பகடை உருட்டுவதில் வல்லவன். அதற்குக் காரணம் அவனுடைய அண்ணன், தான் இறப்பதற்கு முன்னதாக இரண்டு பெருவிரல்களையும் வெட்டித் தருகிறான். அவைதான் பகடைக்காய்களாக மாறி, வெற்றி தேடித்தருகின்றன. இப்படி சுவையான தகவல்கள் நிறைய உள்ளன.
நன்றி: தினத்தந்தி, 08/11/2017