மலை உச்சியில் மறுபிறப்பு

மலை உச்சியில் மறுபிறப்பு, அருனிமா சின்ஹா, தமிழில் ஆண்டாள் பிரியதர்ஷினி, விலை 140ரூ.

ரெயில் பயணத்தின் போது, சங்கிலி திருடர்களுடன் போராடியதால் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டு இடது காலை இழந்த அருனிமா சின்ஹா என்ற வீராங்கனை, சிகிச்சைக்குப் பிறகு ஊனமுற்ற காலுக்கு செயற்கை கால் பொருத்தி புது வாழ்வு பெற்றதோடு, அந்தக் காலுடன் இமயமலை சிகரம் ஏறி அதன் உச்சம் தொட்ட உண்மையான சாதனை வரலாறு. அவரது வார்த்தைகளால் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களுக்கெல்லாம் சிகரமாகத் திகழும் இந்த நூல், ஒவ்வொருவர் மனதிலும் ஆழப் பதிந்து நம்பிக்கை கலந்த புது உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை. அருனிமாவின் அத்தனை வேதனைகளையும் அப்படியே உள்வாங்கி, அவற்றை அதே உணர்ச்சிப் பிரவாகத்துடன் மொழி பெயர்த்துத் தந்து இருப்பதில் ஆண்டாள் பிரியதர்ஷினி வெற்றி பெற்று இருக்கிறார்.

நன்றி: தினத்தந்தி, 8/5/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *