முறிந்த வானவில்
முறிந்த வானவில், கோ. வசந்தகுமரன், தமிழ் அலை, பக். 144, விலை 100ரூ.
வாழ்வியல் அம்சங்களை, மனித மனதில் புகுத்தும் கவிதை தொகுப்பு நூல். அழகியலை, மிக எளிய நடையில் சின்ன சின்ன கவிதைகளாகப் படைத்துள்ளார். சமகால சூழலை, நாலு வரிகளில், ‘நச்’ என்று பதிய வைக்கின்றன சில.
நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் என சூழலியலை அழகிய வடிவில் பிரதிபலிக்கின்றன கவிதைகள்.
‘ஒரு கூழாங்கல்லை மணலாகச் செதுக்கும் வரை
ஓய்வதில்லை நதி…’
என்கிறது ஒரு கவிதை.
இப்படி, இயற்கை அனுபவங்களின் சாரம் கவிதைகளில் கொட்டி கிடக்கிறது. வாழத் துடிப்போருக்கு உற்சாகத்தைத் தூண்டும் நூல்.
-டி.எஸ்.ராயன்.
நன்றி: தினமலர், 13/9/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818