நேர்மையின் குரல்
நேர்மையின் குரல், தொகுப்பு ஆசிரியர் ராசப்பா, மேலக்காடு பதிப்பகம், விலை 100ரூ.
பொதுவாழ்வில் லஞ்சத்துக்கு எதிராகத் துணிந்து குரல் எழுப்பிய தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தின் உள்ளத்தில் உள்ள அத்தனை நல்ல கருத்துக்களையும் தொகுத்து, அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் தந்து இருக்கிறார் ஆசிரியர்.
பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் எவ்வாறு நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறது இந்த நூல். இடையிடையே சகாயம் அளித்த பேட்டிகளையும் தந்து இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 4/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818