ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்

ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம், பிருந்தாசாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், பக். 200, விலை 180ரூ.

கவிதையைப் பாராட்டாமல் அதை எழுதிய வரை ஆதி அந்தம் வரை பாராட்டுவது தமிழில் அதிகம். அந்த வகையில் கவிதைகளைப் பாராட்டத்தூண்டும் வகையில் உள்ளது, பிருந்தாசாரதியின் கவிதைகள்.

தலைப்புகளிலேயே கவிதைகளின் அடர்த்தி உணரப்பட்டுவிடுகிறது.

“வெட்டப்பட்ட ஆட்டுத்தலை
வெறித்துப் பார்க்கிறது
தோலுரித்துத்
தொங்கவிடப்பட்டிருக்கும்
தன் உடலை”

பக்கம் பக்கமாக சொல்ல வேண்டியதை ‘அந்நியமாதலை’இதைவிட நாலுவரியில் பொட்டிலடித்த மாதிரி சொல்ல முடியாது.

கவிதைகளுடனேயே நம்மையும் பயணப்பட வைக்கும் ஈர்ப்பு இக்கவிதைகளில் உண்டு.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 11/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *