ஒரு கதைசொல்லியின் கதை

ஒரு கதைசொல்லியின் கதை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230.

கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா… ஏன் சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி தானே சோறு ஊட்டுனாங்க. அப்போ நம்பினோம். மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது, யாராவது பேசுவாங்களானு ஏங்குற மனசுக்கு கதை சொன்னா பிடிக்கும்.

அதை சிவா செய்து கொண்டிருக்கிறான். வேண்டாமென்று உதறித் தள்ளிய காதலி, குண்டடிபட்டு கிடக்கும் போதும் அன்பு மாறாமல் சிவாவால் பாதுகாக்க முடிகிறதென்றால், அந்த காதல் தானே பக்தி. இதுவும் ஒருவகையில் ஆத்திகம் பேசுகிற அன்பு தான்.

இந்த காதல் சொல்லிக்குள் இருக்கும் கதைசொல்லியை நாமும் ரசிக்க முடியும். அன்பு தானே கடவுள். தட்டை வீசியெறியும் கதாநாயகியை கோபமாக சீண்டாமல் அன்பாக அரவணைக்கும் அந்த அன்பு தானே கடவுள். தலைப்பாகை போய்விட்டதே என்று அவள் கதறியழுது கடவுளைத் திட்டிக் கொண்டிருக்கும் போது… போனது தலைப்பாகை தான் தலை இல்லையே என்று உரத்து சொல்லி கடவுளின் பக்கம் மடைமாற்றும் கதைசொல்லியை எல்லோருக்கும் பிடிக்கும்.

இன்னும் கதைசொல்லியை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமியின் ‘ஒரு கதைசொல்லியின் கதை’யை படிக்க ஆரம்பிக்கலாம்.

தடகள போட்டியில் சாதனை படைத்த உசேன் போல்ட்டை போல, இந்த எழுத்துலக நாயகனின் புத்தகமும் விறுவிறுப்பு குறையாதது. நிறைவாக லோக தர்மி, நாட்டிய தர்மி சொல்லும் விதமும் அப்படித்தான். புத்தகத்தை எடுத்ததும் தெரியாது… படித்து முடித்ததும் தெரியாது. அப்படி ஒரு மாஜிக்.

– எம்.எம்.ஜெ.,

நன்றி: தினமலர், 2.5.21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031404_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *