பாவை விளக்கு
பாவை விளக்கு, அகிலன், தாகம் வெளியீடு, விலை 400ரூ.
புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலன் படைத்தவற்றில் தனிச்சிறப்பு பெற்ற நாவல், பாவை விளக்கு. எழுத்தாளர் தணிகாசலம், அவர் சந்தித்த செங்கமலம், உணர்ச்சிப் பிழம்பாக அமைந்த உமா, தணிகாசலத்தின் மனைவி கவுரி, உமாவின் தந்தை சந்திரசேகரன் போன்ற கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டத்தைக் கொண்டு விறுவிறுப்பாக பின்னப்பட்ட இந்த நாவல், யதார்த்தமான நிகழ்வுகளைக் கொண்டது என்பதால், படிக்க சுவாரசியமாக இருக்கிறது. தணிகாசலத்துக்கும் உமாக்கும் இடையே நடைபெறும் மனதளவிலான போராட்டம் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. முழு நீள நாவலுக்கு உரிய அத்தனை அம்சங்களையும் கொண்டு இருப்பதால் இந்த நாவல் அழியாப்புகழ் பெற்றது. எத்தனை முறை படித்தாலும் சலிப்புத் தட்டுவதே இல்லை என்பதே இந்நாவலின் சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 6-3-19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818