பச்சைநிற மரகத பாபா

பச்சைநிற மரகத பாபா, எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன், ஸ்ரீ சாய்ஜர்னல் சென்டர், பக்.96, விலை ரூ.100.

ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகவும் சிரமமானது. ஆனால், ஸ்ரீசாயி மார்க்கம்எனும் ஆன்மிகப் பத்திரிகை கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை 16 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொடர்ந்து வெளிவருவதற்குக் காரணம், பச்சைநிற மரகத சாயி பாபாதான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஸ்ரீசாயி மார்க்கம் பத்திரிகையின் ஆசிரியரும், பச்சை நிற மரகத சாயிபாபா ஆலயத்தின் நிறுவனருமான எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்.

நூலின் முற்பகுதியில், ஷீரடியில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சைநிற மரகத சாயிபாபா சென்னைக்கு வந்து ஊரப்பாக்கத்தில் கோயில் கொண்ட அற்புத வரலாற்றை விரித்துரைக்கிறார் நூலாசிரியர். பச்சைநிற மரகத பாபாவின் பெருமைகள், அவர் நிகழ்த்திய அற்புதங்கள், ஒரு பெண்ணிக்கு வந்த பெரும் சோதனை மரகத பாபாவின் பெருங்கருணையால் பனி போல் மறைந்த அற்புதம், ஏழு வயது பெண் குழந்தைக்கு இருந்த புற்றுநோய் பாபாவின் திருவருளால் காணாமல் போனது என்பன போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் பல தகவல்கள் உள்ள இந்நூல், பாபா அன்பர்களுக்குக் கிடைத்த பக்திப் பொக்கிஷம்.

நன்றி: தினமணி,27/9/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *