பண்டைக்கால இந்தியா
பண்டைக்கால இந்தியா, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.எஸ். புக்ஸ் வேல்டு, விலை 230ரூ.
மார்க்சிய கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கே, 1942ம் ஆண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது பெரும்பகுதி எழுதப்பட்ட இந்த நூல், இந்தியாவின் ஆரம்ப கால வரலாற்றை மார்க்சிய சிந்தனையோடு அணுகி இருக்கிறது. ஆரியர்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து இந்தியாவுக்கு வந்தார்கள்? யாகம், வேதம் என்றால் என்ன? அந்தக் காலத்தில் இருந்த ஆண் பெண் திருமண உறவுமுறை எப்படி? என்பது போன்றவற்றை விளக்கி இருக்கும் ஆசிரியர், பகவத் கீதை என்பது, மகாபாரத யுத்தத்தின் நடுவில் கூறப்பட்டது அல்ல என்ற வித்தியாசமான கருத்தை முன்வைத்து இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 10/7/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818