கல்கியின் சிறுகதைக் களஞ்சியம்

கல்கியின் சிறுகதைக் களஞ்சியம், ஏ.கே.எஸ்.புக்ஸ் வேல்டு, பக். 548, விலை 450ரூ. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், அலைஓசை, தியாக பூமி போன்ற பெரிய நாவல்களில் வைரச் சுரங்கங்களை வைத்த பேராசிரியர் கல்கி, தன் சிறுகதைகளிலும் அமுதம் தேக்கி வைத்தார். சித்ர வேலைப்பாடுகள் செய்தார். தேச விடுதலையும், பெண் விடுதலையும் கல்கிக்கு இரு கண்கள். இவை அவரது சிறுகதைகளிலும் பிரதிபலித்தன. பழ.சிதம்பரன் என்ற எழுத்தாளர் எழுதினார். கல்கியின் தமிழ் நடை மத்த கஜத்தின் கம்பீர நடையைப் போன்றது. ஜீவ நதியின் நீரோட்டத்திற்கு ஒப்பானது. சிவகாமியின் […]

Read more

பண்டைக்கால இந்தியா

பண்டைக்கால இந்தியா, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.எஸ். புக்ஸ் வேல்டு, விலை 230ரூ. மார்க்சிய கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.டாங்கே, 1942ம் ஆண்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது பெரும்பகுதி எழுதப்பட்ட இந்த நூல், இந்தியாவின் ஆரம்ப கால வரலாற்றை மார்க்சிய சிந்தனையோடு அணுகி இருக்கிறது. ஆரியர்கள் எனப்படுபவர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து இந்தியாவுக்கு வந்தார்கள்? யாகம், வேதம் என்றால் என்ன? அந்தக் காலத்தில் இருந்த ஆண் பெண் திருமண உறவுமுறை எப்படி? என்பது போன்றவற்றை விளக்கி இருக்கும் ஆசிரியர், பகவத் கீதை என்பது, மகாபாரத […]

Read more