ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, பேராசிரியர் கா. செல்லப்பன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 70ரூ.

இலக்கிய சிறப்பு வாய்ந்த நூல் இது. இங்கிலாந்து இலக்கியத்தின் பிதாமகனான ஷேக்ஸ்பியர், மேல்நாட்டில் புரட்சிக்கவியாகத் திகழ்ந்த ஷெல்லி, இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் தாகூர் உள்பட 22 இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார் பேராசிரியர் கா. செல்லப்பன்.

மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, புதுமைப்பித்தன், டாக்டர் மு. வரதராசனார், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் ஆற்றலையும், அவர்களின் படைப்புகளின் சிறப்புகளையும் அருமையாக எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். படித்து ரசிக்க வேண்டிய புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 22/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *