சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும்
சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும், முத்து. குணசேகரன், உலகத் தமிழாய்ச்சி நிறுவனம், விலை 105ரூ.
1923-ம் ஆண்டு மே 1-ந் தேதியை மே தினமாக முதன் முதலாகக் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர். அது முதல்தான் “மே தினம்” கொண்டாடப்படுகிறது. பொது உடமை இயக்க முன்னோடி இவர். திராவிட இயக்கத்தின் முன்னோடி தந்தை பெரியார். பெரியாரும், சிங்காரவேலரும் 1932-ல் “சுயமரியாதை சமதர்ம இயக்கம்” என்ற பேரியக்கத்தை தொடங்கினர். அது பற்றி விரிவாகக் கூறும் சிறந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.
—-
மநு தர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு, சி. இளங்கோ, அலைகள் வெளியீட்டகம், விலை 50ரூ.
விடுதலைக்குப்பின் மறுகாலனியத்தை நோக்கி’ என இக்கால நிலைமை வரையாக 25 தலைப்புகளில் முற்போக்குத் தமிழ் மரபுகளின் தடங்களை நூலாசிரியர் தொகுத்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.