சிவமகுடம்
சிவமகுடம், ஆலவாய் ஆதிரையன், விகடன் பிரசுரம், விலை 225ரூ.
தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும், களப்பிரர்களும், சாளுக்கியர்களும் அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற “உறையூர் போர்”, ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது! எனினும் பிற்கால வரலாற்றை மாற்றிப்போட்டது.
சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியன், உறையூரின் மீது படையெடுத்தபோது நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த சரித்திரக்கதை, விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஸ்யாம் வரைந்த வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன.
நன்றி: தினத்தந்தி 6/6/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026483.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818