சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்)

சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்), பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200.

எழுமின், விழிமின் என முழங்கிய வீரத்துறவி; மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்தவர்; சீர்திருத்தவாதியாகவும், ஜாதி மத இன வேறுபாடுகளைச் சாடிய ஆன்மிகவாதியாகவும், பொதுவுடைமைவாதியாகவும், இந்தியாவின் உயர்வு பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த சிந்தனாவாதியாகவும் விளங்கியவர்.

இந்து மதத்தின் பெருமையை மீட்டெடுத்து அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உலகின் பார்வையை இந்தியாவின் மீது திருப்பிய வீரத்துறவி. பாரதத்தின் புகழை வெளிநாடுகளில் பரப்பிய முன்னோடி. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 300 ஆண்டுகளிலும் எவரும் சாதிக்க முடியாததை சாதித்துக் காட்டியவர்.

குருதேவர் ராமகிருஷ்ணரின் புகழை அகிலம் உணரச் செய்தவர். இத்தகைய பெருமை பெற்ற சுவாமி விவேகானந்தரின் இளமைக்காலம், ஸ்ரீபரமஹம்சரிடம் அவர் பெற்ற அனுபவங்கள், உலகம் முழுதும் சுற்றி இந்து மதத்தின் அருமை, இந்தியாவின் பெருமைகளை உலகுக்கு உணர்த்திய விதம், ஏழைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர் ஆற்றிய தொண்டு ஆகிய அனைத்தையும் தெளிவாக எளிய தமிழில் விளக்கி இருக்கிறார் ஆசிரியர் பா.சு.ரமணன்.

படிக்கும் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலை உணர்ந்து, அதன் வழி நடக்க முயற்சி செய்வர் என்பது திண்ணம்.

– இளங்கோவன்

நன்றி: தினமலர், 28/11/21.


இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *