பேரறிஞர் அண்ணா களஞ்சியம்

பேரறிஞர் அண்ணா களஞ்சியம், குமுதவல்லி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. அப்பாவித் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன், சி.என்.ஏ. என்னும் மூன்றெழுத்தால் அறிமுகமான அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைக் களஞ்சிய நூல். இந்நூல் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று சுருக்கக் குறிப்பும், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அண்ணா பற்றி எழுதிய புகழ்மாலை தொகுப்பும், கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும், அண்ணாவின் மறைவுக்குப் பின் தலைவர்கள் தெரிவித்த இரங்கல் உரைகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. திறனாய்வுச் செம்மல் எம்.எஸ்.தியாகராஜன் இத்தொகுப்பை செம்மைப்படுத்தியிருக்கிறார். […]

Read more