ஆசிர்வாதத்தின் வண்ணம்
ஆசிர்வாதத்தின் வண்ணம், அருண்சர்மா, எம். சுசீலா, சாகித்ய அகாடமி, பக். 366, விலை 225ரூ. சுதந்திரத்திற்கு முந்தையதும், பிந்தையதுமான அசாம் கிராமங்களின் சூழலை விளக்கும் நாவல். அசாம் மனிதர்களின் உள்ளம், பழக்க வழக்கங்கள், கிராமிய பண்பாடு என, அங்குலம் அங்குலமாக அசாமியர்களின் வாழ்வியலை வர்ணிக்கிறது. வானொலி நிலைய மைய இயக்குனராக இருந்த அருண் சர்மா, இந்நாவலை, சாதாரண இளைஞரின் வழியாக வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினமலர், 11/1/2018.
Read more