கர்மா தர்மா

கர்மா தர்மா, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.64, விலை ரூ.100. அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருக்கும் நூலாசிரியர், ஆன்மிகம் சார்ந்து இந்நூலை எழுதியுள்ளார். செய்வது அனைத்தும் கர்மம், அதன் பலனை நிச்சயிப்பது தர்மம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புதுப்புது இயற்பியல், ஆகாயவியல் விதிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தோறும் அவர்கள் ஈச்வரனின் இயக்க நியதிகளைத்தான் சிறிது புரிந்து கொள்கிறார்கள். விஞ்ஞானம் என்பதே ஈச்வரனை அறியும் அறிவே. விஞ்ஞானிகள் ஈச்வரனைத்தான் ஆராய்கிறார்கள். ஈச்வரனைப் புரிந்து கொள்வதற்காக கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், காஸ்மாலஜி போன்ற படிப்புகளை எல்லாம் […]

Read more

கர்மா தர்மா

கர்மா தர்மா, பேரா.க.மணி, அபயம் பப்ளிகேஷன்ஸ், பக். 64, விலை 100ரூ. ‘பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்’ என்கிறது பகவத் கீதை. ‘ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், அதாவது ஒவ்வொரு கர்மாவும், நம் தர்மத்தின் பலனாலேயே விளைகிறது. அதேபோல் இந்த கர்மாக்களே, நமக்கு தர்மத்தையும் ஏற்படுத்துகிறது’ என்கிறார், நுாலாசிரியர். தர்மத்துக்கு புறம்பான கர்மாவும், தர்மத்துக்கு உட்பட்ட கர்மாவும், உரிய பலனை தரும். இது தான், பாவ, புண்ணியம் என அழைக்கப்படுகிறது. அதனால், நல்ல புண்ணிய பலன்கள் கிடைக்கும் வகையில், நம்முடைய ஒவ்வொரு கர்மாவும் […]

Read more