புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும், கவிஞர் ஈழபாரதி, இனிய நந்தவனம், விலை 80ரூ. காதலும் வேதனையும் மட்டுமே கவிதைகள் ஆவதில்லை. சாதலும் புலம் விட்டுச் சென்று மனம் நோதலும்கூட ஆழமான கவிதைகளாய் உருவெடுத்து மனதை அசைக்கக் கூடும் என்று நிரூபிக்கும் வண்ணம், புலம்பெயர்ந்தோர் எழுதிய கவிதைகளை ஆய்வு செய்து அதில் மறைந்திருக்கும் வலியைப் படம் பிடித்துக் காட்டும் தொகுப்பு! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more