கோடிக்கால் பூதம்

கோடிக்கால் பூதம்,  அ.உமர் பாரூக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.128, விலை ரூ.150. கரோனா இரண்டாம் அலை தனிநபர் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளைத் துல்லியமாக சித்தரிக்கும் நாவல். டேவிட், மைக்கேல், குமார் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ள இந்நாவல், கரோனா தொற்று உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் கூறுகிறது. கேரளாவில் மதபோதகர் பணி செய்யும் டேவிட் கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் சொந்த ஊரில் தங்கியிருக்க, கேரளாவில் உள்ள பெரிய போதகர் அவனை உடனே கேரளாவுக்கு வந்து பணியில் சேரும்படி கட்டளையிடுகிறார். […]

Read more