நிழலின் வாக்குமூலம்
நிழலின் வாக்குமூலம், பொன்.வாசுதேவன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 90ரூ. கவிதைகள் ஒவ்வொன்றும் கவிதைக்கான ஆழத்தைத் தேடிப் பயணிக்கிறது. இடையிடையே வாழ்க்கைக்கான ஆதாரங்களைக் கண்ட பெருமிதங்களையும் தொட்டுச் செல்கிறது. சில சமயம் கவிஞருக்கு அது ஒரு ஞாபக மீட்டலாக மீண்டு வந்து காட்சிப்படுத்துகிறது. அதுவே வாசிப்பினரின் அடையாளத் தேடலாகவும் கடந்து போகிறது. ஒன்றமில்லாததில் எல்லாம் இருந்தது போன்ற வரிகளில் அனுபூதியியலை நோக்கிய பயணம் தெரிகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 12/10/2016.
Read more