திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், மு.அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.990. காசி மாநகரில் முனிவர்கள் பலர் கூடியிருந்து மதுரையைப் பற்றியும், அங்கே சிவபெருமான் கோவில் கொண்டிருப்பது பற்றியும் உரையாடுகின்றனர். அவர்களுடன் இருந்த அகத்தியரைப் பார்த்து, சிவபெருமான் திருவிளையாடல் புரிவதற்கு ஏற்ற இடமாக மதுரையைத் தேர்ந்தெடுத்தது குறித்து கேட்டனர். அந்த முனிவர்களுக்கு, 63 திருவிளையாடலையும் அகத்தியர் கூறுவதைப் போல் இந்த நுால் துவங்குகிறது. தமிழ் மொழியில் நுாற்றுக்கணக்கான தல புராணங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் மிகவும் பழமையானதாக விளங்குகிறது. 13ம் நுாற்றாண்டில் தோன்றியது, திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம். […]

Read more

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள், வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.250. மகாகவி பாரதியின் பாடல், கவிதைகளை உள்ளடக்கிய முழுமையான மறு பதிப்பு நுால். எளிதாக புரியும் வண்ணம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. பாடல்களை சுலபமாக அடையாளம் காணும் வகையில் நிரல்படுத்தப்பட்டுள்ளது. கெட்டி அட்டையில் சிறப்பாக, ‘பைண்ட்’ செய்யப்பட்டுள்ளது. பாரதி பாடல்களில் உள்ள கம்பீரம் இந்த நுாலிலும் தெரிகிறது. தெளிவான எழுத்துக்கள், வாசிப்பைத் துாண்டுகின்றன. வீடுகளில் இருக்க வேண்டிய காலப்பெட்டகம். நன்றி: தினமலர், 2.5.21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

மன உறுதி பெறுவது எப்படி

மன உறுதி பெறுவது எப்படி; ஆசிரியர்; அனிதா பானர்ஜி, வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், விலை ரூ. 40/- குறிக்கோளில் வெற்றி பெற மன உறுதி தான் முக்கிய தேவை. அது, பாதையை வகுத்து, பயணத்தை துாண்டும். இத்தகைய பண்பை பெறும் வழிமுறையை சொல்லும் நுால்.பத்து தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பது பற்றி தனியாக விளக்கப்பட்டுள்ளது. சிறிய உதாரணங்கள் நிறைந்துள்ளன. மன உறுதி ஏற்பட்டு விட்டால், விடாமுயற்சி தொடர்ந்து வரும். முயற்சியால் செயல் கைகூடும். முன்னேற விரும்புவோருக்கு உதவும் எளியநுால். -கிருஷ்ணவேணி. நன்றி: தினமலர். […]

Read more