தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள்
தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள், பா. வரதராசன், குமுதம், ஒவ்வொரு பாகத்தின் விலை 125ரூ.
திருக்கோயில்களுக்குச் செல்பவர்களுக்கு அத்திருக்கோவிலின் வரலாறு, தெய்வத்தின் திருநாமம், மகிமை, வரந்தரும் கடவுள்களின் சிறப்பு, தரிசிப்பதால் மக்களுக்கு கிட்டும் பலன்கள் ஆகியவற்றை விளக்குவதோடு, திருக்கோவில்கள் பற்றிய கலைக்களஞ்சியமாகவே இந்நூலை ஆக்கியுள்ளார் ஏ.எம்.ராஜகோபாலன். முதல் பாகத்தில் 18 கோவில்களைப் பற்றியும், 2-ம் பாகத்தில் 23 கோவில்களைப் பற்றியும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி, 9/11/2016.
—-
இரா. மோகன், ச. கவிதா, கலைஞன் பதிப்பகம், விலை 90ரூ.
பன்மொழிப் பாவலர், எழுத்தாளர், ஆராய்ச்சியாளர், கவிஞர், பேச்சாளர் என்று பன்முகம் படைத்தவர் பேராசிரியர் இரா. மோகன். “டாக்டர் மு. வரதராசனாரின் செல்லப்பிள்ளை” என்ற புகழும் பெற்றவர். 117 நூல்கள் எழுதியவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை முனைவர் ச. கவிதா சுவைபட எழுதியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 9/11/2016.