வாழ்வியல் சிந்தனைகள்
வாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி, பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம், விலை 250ரூ.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமது சிந்தனையில் உதித்த கருத்துக்களை, நூல்களாக எழுதி வந்தார். இதில் 12-வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. இந்த வரிசையில் இது கடைசி நூல்.
இத்துடன் 1000 சிந்தனைகள் நிறைவு பெறுகின்றன. நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்தபோது வெளிப்பட்ட சிந்தனைச் சிதறல்கள், அனுபவங்கள் வாயிலாக வெளிப்பட்ட சீரிய கருத்துக்கள் பொன்னும் வைரமுமாக இந்த நூலில் ஜொலிக்கின்றன.
வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய இந்த நூல், ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியதாகும். நூல், அழகிய வடிவமைப்புடன் அமைந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 26/4/2017.