வாட் இஸ் பரதநாட்டியம்?
வாட் இஸ் பரதநாட்டியம்?(ஆங்கிலம்), வித்யா பவானி சுரேஷ், ஸ்கந்தா பப்பிளகேஷன்ஸ், விலை 1330ரூ.
தலைப்பு பரதநாட்டியம் கற்றுத்தரும் புத்தகம்போல் இருந்தாலும், பரத நாட்டியக் கலைஞரும் இசை ஆராய்ச்சியாளருமான வித்யா பவானி சுரேஷ், பரதக் கலையோடு வாழ்க்கையில் முன்னேறும் கலையையும் கற்றுத்தரும் வகையில் எழுதியிருக்கும் நூல் இது.
“ஒருநாள் நான் லிஃப்டில் சென்றபோது, அவசர அவசரமாக தலைமுடியில் இருந்து ஈரம் சொட்ட ஓடிவந்தார் ஒரு பெண்மணி. வலது கையால் தலையைக் கோதி காய வைத்தபடியே, அரக்கப்பரக்க அலுவலகத்துக்குச் சென்ற அவரைப் பார்த்த எனக்கு சங்கடமாக இருந்தது. ஐந்து நிமிடம் ஹேர்டிரையரில் காயவைத்திருக்கலாம். ஆனால் ஏன் முடியவில்லை? பரதக் கலைஞர்களான நாங்கள் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குத் தயாராக இரண்டரை மணி நேரம் வேண்டும். அது எப்படி எங்களால் முடிகிறது? திட்டமிடல். அது இல்லாதது இவரைப்போல் பலருக்கும் பிரச்னை என்று தோன்றியது. அதனால் எழுதப்பட்டதுதான், ‘ஆஹார்யா அபினயா – தி ராய்ட் பர்ஸோனா’ என்ற கட்டுரை! பரதம் தொடர்பான முத்திரை முதல் அபிநயம் வரை அத்தனையையும் விளக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் இதுபோன்ற பல விஷயங்களையும் அதற்கான தீர்வுகளையும் சொல்லி, வாழ்வில் எல்லோரும் வெற்றி பெற வழிகாட்டியிருப்பதை நிச்சயம் பாராட்டலாம்!
நன்றி: குமுதம், 13/3/2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818