தேசிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும்
தேசிய நீர் வளமும் நதிநீர் இணைப்பும், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 344, விலை 250ரூ.
நதிகள் தேசியமயமாக்கப்பட்ட வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் உருவான நூல் இது. பேச்சுவார்த்தைகள் மூலம் நைல் நதி, மீகாங் நதி, டெலிவரி நதி, டான்பு நதி, நைஜர், செனகல் நதி, நேபாள அணைக்கட்டுகள், சிந்து நதி பிரச்னை (பக். 12-13) போன்றவை, உலகளவில் தீர்க்கப்பட்டுள்ளதை பட்டியலிட்டுள்ளார், நூலாசிரியர். ஒன்பது ஆண்டுகளில் மேட்டூர் அணை கட்டப்பட்டது (பக். 200) என்பது உட்பட, பல புள்ளி விவரங்களையும் கொடுத்துள்ளார். மகாநதியிலிருந்து 1000 டி.எம்.சி., கோதாவரியிலிருந்து 2000 டி.எம்.சி., கிருஷ்ணாவிலிருந்து 1250 டி.எம்.சி., நீர் வீணாகக் கடலில் கலப்பது (பக். 9) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிந்தனை செயலாக மாறும்போது வரலாறு உருவாகிறது. செயல் சிந்தனைகளாக மலரும்போது இலக்கியம் உருவாகிறது என்ற ராஜாஜியின் (பக். 205) கருத்துக்களோடு, பாரதி, திருவள்ளுவர் என, பலரது இலக்கிய மேற்கோள்கள் இந்த நூலில் காட்டப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களும், நீர் ஆதாரங்களைப் பெருக்கத் திட்டமிடுவோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய நூல். -பின்னலூரான். நன்றி: தினமலர், 27/9/2015.