வள்ளுவர் ஈன்ற முப்பால் தமிழகத்தில் பன்முக நோக்கும் போக்கும்

வள்ளுவர் ஈன்ற முப்பால் தமிழகத்தில் பன்முக நோக்கும் போக்கும், பேராசிரியர் தி. முருகரத்தனம், தமிழ்ச் சோலை, பக். 150, விலை ரூ. 150. தமிழில் அறம், பொருள், இன்பம் என்று கூறப்படும் முப்பாலுக்கும், வட மொழியில் தர்மார்த்தகாம மோட்சம் என்று கூறப்படும் அறம், பொருள், இன்பம், வீடு இவற்றுக்கும் இடையிலான ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆராயும் ‘தென்தமிழ் முப்பால் மரபும் வடமொழி நாற்பால் மரபும்’ கட்டுரையில் தொடங்கி, தமிழ் இலக்கண- இலக்கியங்களில் உறுதிப் பொருள்கள், வள்ளுவரின் எழு பிறப்பு எழுப்பும் குழப்பம், இம்மையும் மறுமையும் – […]

Read more

தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும்

தமிழ்ப் பண்பாடும் இலக்கியச் சிறப்புகளும், வி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.170. பண்டைய இலக்கிய பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த கட்டுரைகளை கொண்டுள்ள நுால். முதல் பகுதியில் தமிழர் பண்பாடு, தமிழ் மொழி சிறப்பைக் கூறும் கட்டுரைகளும், இலக்கியங்களில் காணப்படும் அறக்கருத்து அறிவுரைக் கட்டுரைகளும் உள்ளன. இரண்டாம் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பியல்புகளையும் தொன்றுதொட்டு வரும் தமிழர் பழக்க வழக்கங்கள், கோட்பாடுகள், அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்வியல் கூறுகள், நம்பிக்கைகள், நாகரிக மாற்றங்கள் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளது.திருக்குறள் முப்பாலில் உள்ள தேர்ந்தெடுத்த 75 குறள்களுக்கு விளக்கமும், […]

Read more

திருக்குறளில் உயிரினங்கள்

திருக்குறளில் உயிரினங்கள், புலவர் இரா.நாராயணன், பூங்கொடி பதிப்பகம், விலைரூ.100 உயிரினங்களிடம் வள்ளுவர் கொண்டிருந்த அன்பை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். குறள்களில் அவை எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளன என தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம், தாவரங்கள், விலங்குகள், உயிரும் உடலும் என்ற தலைப்பில் கட்டுரைகள் உள்ளன. உயிரினங்கள் மீதான நெகிழ்வை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளன. உரிய குறள்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. – ராம் நன்றி: தினமலர், 24/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000014324_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

அம்பிகாபதி – அமராவதி காதல் காவியம்

அம்பிகாபதி – அமராவதி காதல் காவியம், அ.மு.சம்பந்தம் நாட்டார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.375. மனித நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே உயிர்ப்புடன் உள்ள காதலை முன்னிருத்தியுள்ள காவியம். கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு வந்து சென்ற மன்னன் மகள் அமராவதி, அம்பிகாபதியிடம் காதலைக் கற்றுக் கொண்டாள். இந்த காதலை அறிந்த மன்னன், அம்பிகாபதியைக் கைது செய்து குற்றவாளியாக்கினான். சிற்றின்பம் கலக்காமல் நுாறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒரு போட்டியை அறிவிக்கிறான் மன்னன். கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நுாறு பாடல்களை பாடியவனை, ஆரத்தழுவிக் […]

Read more

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020)

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875-2020), த.முத்தமிழ்,  காவ்யா, பக்.418, விலை ரூ.420. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக, புற, அற நூல்கள் உள்ளன. அவற்றில் அகம், புறம் சார்ந்த கார்நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, கைந்நிலை, திணைமாலை நூற்றைம்பது ஆகிய ஏழு இலக்கியங்களின் பதிப்பு வரலாற்றை முழுமையாகத் தருகிறது இந்நூல். ஓர் இலக்கியத்தைக் கூறுவதற்கு முன்பாக, அவ்விலக்கியம் குறித்த பதிப்புகள், அவற்றை வெளியிட்ட பதிப்பகங்கள், அவ்விலக்கியத்திலுள்ள பாட பேதங்கள், குறிப்புரைகள், துறை விளக்கம், அட்டவணை, […]

Read more

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை, ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.400, விலை ரூ.350. மதுரைக்காஞ்சி நூலை ஆய்வு நோக்கில் எழுதியுள்ள நூலாசிரியர், தமிழரின் தொன்மை வாழ்க்கை முறைகளையும் இன்றைய நவீன வாழ்க்கையையும் ஒப்பிட்டும் எடுத்துக்கூறியுள்ளார். அதற்காகவே மனித இன வரலாற்றையும் நூலின் முதல் கட்டுரையான மதுரைக்காஞ்சி- நகர்மயமாதலின் பனுவலில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார். அன்றைய காலத்திலிருந்த மதுரையின் அமைப்பு, நகரில் வாழ்ந்த மக்களின் தொழில், அற வாழ்க்கைக்கு ஆலோசனை கூறும் அவை, நகரின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை புலவர்களின் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார் மதுரை […]

Read more

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு,  பெ.சுப்பிரமணியன், காவ்யா, பக்.170, விலைரூ.160. ஒரு சமூகத்தின் புவிச் சூழலியல், குடியிருப்புகள், பொருளாதாரம், குடும்ப அமைப்பு, திருமணம் உள்ளிட்ட சடங்குகளைத் தொகுத்துக் கூறுவது இனவரைவியல் ஆகும். சிலப்பதிகார காப்பியத்தை இனவரைவியல் கோட்பாடு முறையில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை ஆகிய 3 காதைகளும் தொல்குடிகளின் வாழ்வியலைக் காட்டும் பகுதிகளாக உள்ளன. வேட்டுவ வரி இயலில் வேட்டுவ இனமக்களின் கூத்துகள், ஆடல்- பாடல், இசை, கொற்றவை வழிபாடு, பலியிடல் முதலிய பல்வேறு செய்திகள் […]

Read more

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி, சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 786, விலை 800ரூ. தமிழில் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, வீரமாமுனிவரின் சதுரகராதி எனத் தொடர்ச்சியாக இதுவரை எண்ணற்ற அகராதிகள் வெளிவந்திருக்கின்றன. பின்னர், தமிழகத்திலேயே சில குறிப்பிட்ட வட்டாரங்களுக்கே உரியதான வழக்குச் சொல் அகராதிகளும் வரத் தொடங்கின. இவற்றைத் தொகுப்பது என்பதே பெரும் உழைப்பையும் நேரத்தையும் வேண்டுகிற மிகுந்த அக்கறையுடன் கூடிய பணி. தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி என்ற இந்த நூலில் நாஞ்சில் நாடு, நெல்லை, செட்டிநாடு, நடுநாடு, தஞ்சை, கொங்கு, மதுரை, முகவை, பரதவர் […]

Read more

கண்ணதாசன் ஓர் அமுதசுரபி

கண்ணதாசன் ஓர் அமுதசுரபி, தூத்துக்குடி கலைமணி, அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், விலைரூ.200 மரபுச்சிந்தனைகளைப் புதுமையாக ஆக்கியதும், புதிய சிந்தனைகளை மரபுகளாக்கியதும், கண்ணதாசனின் இலக்கிய சாதனை. திரைப்பாடல் பின்னணியில் இலக்கண, இலக்கிய அம்சங்களின் நுட்பங்களை, முதலிரவுப் பாடலில் தேனைப் பார்த்தேன், நினைத்தேன், அழைத்தேன், துடித்தேன், ரசித்தேன், அணைத்தேன் என 18 வகைகளில் காட்டும் ஜாலங்கள் இன்றும் ரசனைக்குரியன. அந்த வகையில் 21 பிரிவுகளில் இலக்கிய, இலக்கணத்தை முன்னணியில் கொண்டு வந்து காட்டிஉள்ளது. – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன் நன்றி: தினமலர், 13/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%bf/ […]

Read more

உவமைத் தொடர்களைச் கண்டுபிடியுங்கள்!

உவமைத் தொடர்களைச் கண்டுபிடியுங்கள்!, டி.என்.இமாஜான், மணிமேகலை பிரசுரம், விலைரூ.80 படங்களை பதிவிட்டு, அதில் உள்ள உவமையை கண்டுபிடிக்கும் புதிர்களை உள்ளடக்கிய தொகுப்பு நுால். மொத்தம் 100 புதிர்கள் உள்ளன. தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் மனங்கொள்ளத்தக்க வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதுமை நுால். பக்கத்துக்கு இரண்டு படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் புதிர்களை கண்டுபிடிக்கும் போது, இயல்பாகவே தமிழில் உவமை இலக்கணம் மனதில் பதியும். மொழியை கற்பிக்கும் எளிமையான முயற்சியாக அமைந்துள்ள நுால். – ஒளி நன்றி: தினமலர், 30/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 2 3 56