ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும்

ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும், பேரா. சே. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம்,  பக். 418, விலை ரூ.400.  ‘ஒப்பிலக்கியம்’ என்ற ஓர் இலக்கியம் சென்ற நூற்றாண்டில்தான் தோற்றம் பெற்றுள்ளது. இதன் தாயகம் ஐரோப்பா. பிறகுதான் இது உலகெங்கும் பரவியதாகத் தெரிய வருகிறது. இந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர் ஒப்பிலக்கியத் துறையில் பேராசிரியராக இருப்பதால், அதுகுறித்த ஆழ்ந்த புரிதலுடன் நுட்பமாக சில செய்திகளை இந்தநூலில் பதிவு செய்திருக்கிறார். ஆய்வுத் தலைப்புக்கேற்ப இரு பகுதிகளாகப் பகுத்து, முதல் பகுதியில் ‘ஒப்பிலக்கியக் கருத்துருவாக்கமும் கோட்பாடுகளும்’ எனும் தலைப்பில் பிரெஞ்சு […]

Read more

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை

மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி ஆய்வுரை, ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.400, விலை ரூ.350. மதுரைக்காஞ்சி நூலை ஆய்வு நோக்கில் எழுதியுள்ள நூலாசிரியர், தமிழரின் தொன்மை வாழ்க்கை முறைகளையும் இன்றைய நவீன வாழ்க்கையையும் ஒப்பிட்டும் எடுத்துக்கூறியுள்ளார். அதற்காகவே மனித இன வரலாற்றையும் நூலின் முதல் கட்டுரையான மதுரைக்காஞ்சி- நகர்மயமாதலின் பனுவலில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளார். அன்றைய காலத்திலிருந்த மதுரையின் அமைப்பு, நகரில் வாழ்ந்த மக்களின் தொழில், அற வாழ்க்கைக்கு ஆலோசனை கூறும் அவை, நகரின் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை புலவர்களின் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார் மதுரை […]

Read more

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்), ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம்,  பக்.23.,  விலை ரூ.200. தமிழின் தொன்மையையும், இலக்கியப் பெருமையையும் எக்காலத் தலைமுறைக்கும் எடுத்துரைக்கும் வளங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பெரும் தொகுப்பில் பொருநராற்றுப்படையானது பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வரிசையில் இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படும் நூலாகும். இசைப்பாடல் கலைஞர்களான பொருநர்கள் வறுமையில் வாடிய நிலையில், அந்த வறுமையைப் போக்க அரசர்களை நாடிச்சென்று அவர்தம் பெருமைகளைப் பாடி பரிசில் பெற்று வாழ்ந்ததை பொருநராற்றுப்படையின் மூலம் அறியமுடிகிறது. இந்நூலாசிரியர் கிரேக்க இலக்கியத்தோடு, பொருநராற்றுப்படையை ஒப்பிட்டு […]

Read more

படேல் நேரு

படேல் நேரு – விடுதலை நெருப்பும் எதிரெதிர் துடுப்பும், மீனாட்சி புத்தக நிலையம், ஜெகாதா, பக். 288, விலை ரூ. 250. சுதந்திரத்திற்கு முன்பும்பின்பும் நேருவும் படேலும்எதிரெதிர் கருத்துகளைக் கொண்டிருந்ததையும், படேல், நேரு இருவரின் மீதும் காந்தியடிகள் கொண்டிருந்த பற்றுதலையும், நம்பிக்கையையும் விவரித்துக் கூறும் நூல். சுதந்திரம் பெற்ற பின் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதிலும் படேல்-நேருவிடையே வேறுபட்ட கருத்துகள் இருந்தன. முதலாளித்துவ சமூகம் பயனுள்ளது என்பதில் படேல் உறுதியாக இருந்தார். புதிய சோஷலிச உலகம் என்ற நேருவின் கனவை படேல் நிராகரித்தார். நாட்டு […]

Read more

தடங்கள்

தடங்கள், எம்.ஏ.சுசீலா, மீனாட்சி புத்தக நிலையம், விலை: ரூ.225. பெண்களும் நெருக்கடிகளும் தன்னுடைய அனுபவங்களிலிருந்தே இந்த நாவலை எழுதியதாகச் சொல்கிறார் நாவலாசிரியர் எம்.ஏ.சுசீலா. தனது பேராசிரியர் பணியில் எதிர்கொண்ட பலதரப்பட்ட பெண்களை நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார். நாவல் முழுக்கவும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள்தான். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சினைகள். பெண்களின் கோணத்திலிருந்தே அவர்களுடைய பிரச்சினைகள் விவரிக்கப்படுகின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கெல்லாம் ஆதார மையமாக ஆண்களே இருக்கிறார்கள். பெண்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் எப்படித் திணறுகிறார்கள் என்பனவற்றைச் சொல்வதே நாவலாசிரியரின் அக்கறையாக […]

Read more

உடல் அரசியல்

உடல் அரசியல், ஜெகாதா, மீனாட்சி புத்தக நிலையம், பக்.232, விலை ரூ.200. உடல் மொழி பற்றி கேள்விப்பட்டிருப்போம். பேசும்போதும், பேசுவதற்கு மாற்றாகவும் உடல் மொழி உதவுகிறது. இந்த “உடல் அரசியல்’ நூல் கூட ஒருவிதத்தில் உடலின் பேச்சை – உடலின் மொழியை – நாம் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகிறது. நான் என்று ஒருவர் தன்னை நினைத்துக் கொள்வது அவருடைய சிந்தனை, மனோபாவம் ஆகியவை மட்டுமல்ல, இந்த உடலும் சேர்த்துத்தான் என்பதால் உடலைப் பற்றி தெரியாத விவரங்களை இந்நூல் சொல்லித் தருகிறது. நமது உடலில் உள்ள […]

Read more

தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், வெ.மு.ஷாஜகான் கனி, மீனாட்சி புத்தக நிலையம், பக்.160, விலை ரூ.110. உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருது, ஆஸ்கார் விருது. 1929 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலப் படங்களுக்குத்தான் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டது. 1947 முதல் ஆங்கிலம் அல்லாத அயல்மொழிப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு தமிழ் திரைப்படம் கூட , ஓர் இந்திய மொழிப்படம் கூட ஆஸ்கார் விருது பெறவில்லை. இந்தியப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றாலும், ஐந்து இந்தியர்கள் ஆஸ்கார் விருது […]

Read more

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள்

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள், சேதுபதி, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. தமிழ் இலக்கிய உலகில் தனிப் பாதை அமைத்து அதில் உலா வந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது படைப்புகளும், பேச்சும், சிந்தனையும் தனித்துவம் மிக்கவை. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய சாகசனங்களாக விளங்கும் ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என அனைத்தும் பெருந்தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அந்த விழாக்களில் பங்கேற்ற வாசகர்களின் உள்ளத்தின் இலக்கியப் பதிவாக இந்த நூலை பேராசிரியர் முனைவர் சொ.சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்து விழாக்களிலும் பங்கேற்று […]

Read more

திருக்குறளில் உயிர்ச்சூழல்

திருக்குறளில் உயிர்ச்சூழல், க.சி. அகமுடைநம்பி, மீனாட்சி புத்தக நிலையம், பக். 217, விலை 160ரூ. அற நூலாகிய திருக்குறளில் ‘உயிர்ச்சூழல்’ பற்றிய சிந்தனைகள் நிறைந்திருப்பதை வெளியில் கொண்டு வந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருக்குறள் ஆய்வுலகில் இது புதிய முயற்சியும்கூட. அனைத்து உயிர்களும் தத்தம் சூழல்கள் கெடாமல் அல்லது கெடுக்கப்படாமல், இயல்பான முறையில் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்ற சூழலையே ‘உயிர்ச்சூழல்’ என்று வரையறுக்கிறார் பதிப்பாசிரியர். புதிய ஆய்வுக் களத்தை திறந்து வைத்திருக்கும் நூல். நன்றி: குமுதம், 28/12/2016.

Read more

குஷ்பு பக்கம்

குஷ்பு பக்கம், குஷ்பு, நக்கீரன் பதிப்பகம், விலை 120ரூ. தமிழகத்தில் நடிகையாக அறியப்பட்ட குஷ்பு, தற்போது அரசியல் களத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது கருத்துக்களைத் துணிவுடன் வெளியிடும் அவர் பெண்ணியப் போராளியாகவும் கருதப்படுகிறார். அவர் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இது. சமூகம், அரசியல், சினிமா தொடர்பான பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அருமையாக அலசி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- I.A.S. தமிழ் முதல் தாள், பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன், மீனாட்சி புத்தக நிலையம், விலை 150ரூ. இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதுவோருக்காக […]

Read more
1 2 3