சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.336, விலை 300ரூ. தினமணியில் 2000-2001இல் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக மலர்ந்திருக்கிறது. இன்று மக்களுடைய மனதை ஆட்டிப் படைக்கும் காட்சி ஊடகத்தின் தொழில் நுட்பங்களை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது. சின்னத் திரைக்காக ஒரு காட்சியைப் படம் பிடிப்பது என்பது அவவ்ளவு எளிதானதல்ல என்பதை இந்நூலைப் படிக்கும் யாரும் உணர முடியும். ஷாட்-இல் எத்தனை வகைகள் உள்ளன? எடுக்கப்போகிற காட்சிக்கு ஏற்ப கேமரா கோணம் எப்படி மாறுபடுகிறது? ஒருவரை உயர்வாகக் காட்ட […]

Read more

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. சின்னத்திரை கலையின் ஒவ்வொரு பகுதியும் தனி நூலாக வெளியிடும் அளவிற்கு விரிவானவை என்றாலும் சின்னத்திரையின் தோற்றம், அதன் கருவிகளின் இயக்கம், கலை நுட்பங்களில் விளக்கம், காட்சி ஊடகப் படைப்பாக்கத்தின் நுணுக்கம், தொழில் நுட்பங்களின் மாற்றம் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது இந்நூல். தொலைக்காட்சி பற்றி நம் முன்னோர்கள் கற்பனை செய்ததிலிருந்து இன்று வரையிலும் வரலாற்றுப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சுவையுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சின்னத்திரை பற்றிய பல்வேறு தொழில்நுட்பச் சொற்களை இயன்றவரை தமிழில் படைத்திருப்பதும், […]

Read more

திருக்குறளில் காமம்

திருக்குறளில் காமம், இ.கி.இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 188, விலை 125ரூ. ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன. காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. மனமொத்து இருபாலும் […]

Read more

ஜெயகாந்தனின் சிறுகதைகள்

ஜெயகாந்தனின் சிறுகதைகள், மீனாட்சி புத்தக நிலையம். சிறுகதையில் சாதித்தவர் ஜெயகாந்தன் மறைந்த எழுத்து சிற்பி ஜெயகாந்தனின் சிறுகதைகள் பலவற்றை திரும்பத் திரும்ப படிக்கிறேன். அவற்றில் சிலவற்றை சமீபத்தில் படித்தேன். மீனாட்சி புத்தக நிலையம் அந்த நூல்களை வெளியிட்டுள்ளது. பெண் விடுதலைக்காக, கவிதைகள் மூலம் போராடினார் பாரதி; சிறுகதைகள் மூலம் சாதித்தார் ஜெயகாந்தன். அவரது எழுத்து நடை, காட்சிப்படுத்தும் முறை, சம்பவங்களை சினிமா பார்ப்பது போல காட்டும். சிறுகதையின் ஒவ்வொரு நிகழ்வும் கதையின் பாத்திரங்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகளும், மனதில் ஆணி அடித்ததுபோல பதிந்துவிடும். சிறுகதைகள் […]

Read more

நாவல் இலக்கியம்

நாவல் இலக்கியம், மா. இராமலிங்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 176, விலை 110ரூ. தமிழில் மிக அரிதாகத்தான் இத்தகைய திறனாய்வு நூல்கள் வெளிவருகின்றன. ஊடகங்களும் எழுத்தாளர்களும் பெருகிவிட்ட இந்நாளில் தினம்தோறும் ஒரு புத்தகம் வெளிவந்து, நமது புத்தக அலமாரியை நிரப்புகிறது. ஆனால் படைப்பிலக்கியம் வளர்ந்திருக்கும் அளவிற்கு படைப்புகளைத் திறன் கண்டு தெளியும் திறனாய்வு நூல்கள் வளரவில்லை என்ற சூழ்நிலையில் இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. 1972இல் முதல் பதிப்பு கண்ட இந்த நூலுக்கு மு. வரதராசன் அணிந்துரை எழுதியிருப்பது சிறப்பு. இந்த நூல் மீண்டும் […]

Read more

புதுமைப்பித்தன் முத்திரைக் கதைகள்

புதுமைப்பித்தன் முத்திரைக் கதைகள், பதிப்பாசிரியர் இரா. மோகன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 152, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-784-0.html தமிழ்ச் சிறுகதைகளில் மின்சாரம் பாய்ச்சிய எழுத்தாளர் புதுமைப்பித்தனின் பதினான்கு சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனின் பெயரைச் சொன்னதுமே ஒரு வாசகனின் நினைவில் வரக்கூடிய காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், பொன்னகரம் போன்ற கதைகளும் ஒரு விமர்சகன் குறிப்பிடக்கூடிய சாப விமோசனம், இது மிஷின் யுகம், வாடா மல்லிகை போன்ற கதைகளும் அடங்கிய தொகுப்பு இது. […]

Read more

கம்பனில் சங்க இலக்கியம்

கம்பனில் சங்க இலக்கியம், ம.பெ. சீனிவாசன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 304, விலை 200ரூ. கம்பரின் தொல்காப்பியப் புலமை கம்பராமாயணத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. அதேபோல் கம்பர், அகத்திணை, புறத்திணை இரண்டையும் போற்றிய விதத்தையும், சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாடல்களைத் தம் பாடலில், ஏற்றிப் போற்றியுள்ள பாங்கையும் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் அகநானூற்றுக்கு அகவற்பாவால் எழுதிய உரைப் பாயிரத்தில் சங்கப் புலவர்களைச் சான்றோர் என்று குறிப்பிடுவதை அடியொற்றி, கம்பர் கோதாவரி ஆற்றுக்கு உவமை கூறுமிடத்தில் சான்றோர் […]

Read more

இலக்கியமும் வாசிப்பும்

இலக்கியமும் வாசிப்பும், ம. திருமலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 144, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-5.html ஓர் இலக்கியப் படைப்பு அனைத்து வாசகர்களுக்கும் ஒரேவிதமான அனுபவத்தைத் தர வேண்டும் என்ற நியதியில்லை. அவ்வகையில், தமிழ் இலக்கியப் பாடல்களில் நூலாசிரியர் தாம் பெற்ற உயர்ந்த உன்னத அனுபவங்களை அழகான இனிய நடையில் வெளிப்படுத்தியுள்ள திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தநூல். சங்கப் பாடல்களும் கம்பராமாயணமும், பக்தி இலக்கிய முன்னோடி காரைக்காலம்மையார், மணிமேகலையில் நீர் ஆதாரங்கள், என காதல், […]

Read more

தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 4, பக். 416, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-743-8.html உலகம் முழுக்க காதல் இலக்கியங்கள் கணக்கின்றி இரந்தாலும் வாசிக்க சுவையூட்டுவது, முறையாக வாழ வழிகாட்டுவது தமிழக் காதல் இலக்கியங்கள்தாம். எது நல்ல காதல் எனத் தேடித் திரிவோருக்கு, குறுந்தொகை நற்றிணை, நெடுநல்வாடை, கலித்தொகை முதலிய பல்வேறு அக இலக்கிய நூல்களிலிருந்து மட்டுமின்றி திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களிலிருந்தும் பாடல்களை மேற்கோள்காட்டி, தமிழ் இலக்கியங்கள் சொல்வதே நல்ல காதல் […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம்

தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம், க.ப. அறவாணன், தமிழர் கோட்டம், பக். 304, விலை 200ரூ. விஜய நகர அரசர் அரிகரபுக்கரின் மகனான, கம்பள நாயக்கர் மதுரையை அப்போது ஆண்டு கொண்டிருந்த இஸ்லாமியர்களை வீழ்த்தி விட்டு அரியணை ஏறினார். கி.பி. 15, 16ம் நூற்றாண்டில் மதுரையைப் பிடித்த நாயக்கர் தஞ்சாவூர், செஞ்சி, வேலூர் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தன் பேரரசை நிறுவினார். நாயக்கர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் மிகக் சிறப்பாக ஆட்சி புரிந்திருக்கின்றனர். அக்காலத்தில், சமஸ்கிருதமும், தெலுங்கும் தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் இருந்திருக்கின்றன. […]

Read more
1 2 3