ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள்
ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள், சேதுபதி, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ.
தமிழ் இலக்கிய உலகில் தனிப் பாதை அமைத்து அதில் உலா வந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது படைப்புகளும், பேச்சும், சிந்தனையும் தனித்துவம் மிக்கவை.
இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய சாகசனங்களாக விளங்கும் ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என அனைத்தும் பெருந்தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
அந்த விழாக்களில் பங்கேற்ற வாசகர்களின் உள்ளத்தின் இலக்கியப் பதிவாக இந்த நூலை பேராசிரியர் முனைவர் சொ.சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்து விழாக்களிலும் பங்கேற்று பேசிய ஆய்வுரையாளர்களின் பேச்சுக்களையும், ஏற்புரை நிகழ்த்திய ஜெயகாந்தனின் உரைகளையும் முழுமையாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அளித்துள்ள ‘ஞான பீடப் பரிசளிப்பு பாராட்டுரை’ இந்த நூலுக்கு தோரண வாயிலாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த நூல் ஜெயகாந்தனின் வாசகர்களுக்கு இனிய விருந்து.
நன்றி: தினத்தந்தி, 31/5/2017.