ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 165ரூ.

தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுவது, ஜல்லிக்கட்டு. உழவுத்தொழிலுக்கு அடிப்படையானவை காளைகள். அத்தகைய காளைகளை தெய்வமாக மதித்து அதனோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள்தான் ஜல்லிக்கட்டு. அதைப் பற்றி இந்த நூலில் எழுத்தாளர் குன்றில் குமார் விரிவாகவும், சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார்.

விலங்குகளுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லி, ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்திய ‘பீட்டா’ அமைப்பு பற்றியும், அவர்களின் போலித்தனமான செயல்பாடுகள் குறித்தும் அவர் இந்த நூலில் எடுத்துரைக்கிறார். நமது பாரம்பரியங்கள் அனைத்தும் வெளிநாட்டவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற மனக்குமுறலை இந்த நூல் படம் பிடித்துக்காட்டுகிறது.

நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Leave a Reply

Your email address will not be published.