மத்திய கால இந்திய வரலாறு

மத்திய கால இந்திய வரலாறு, சதீஷ் சந்திரா, வேட்டை எஸ். கண்ணன், பாரதி புத்தகாலயம், விலை 390ரூ.

பொதுவாக நாம் வரலாறுகளை பின் தொடர்வதே இல்லை. ஆனால், அதுதான் நமக்கு மிகவும் அவசியமானது. இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் மத்திய கால வரலாறு விலாவாரியாக விவரிக்கப்படுகிறது.

அவர்களின் கட்டிடக்கலை, வளர்ச்சி, வீழ்ச்சி எல்லாமே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சதீஷ் சந்திராவின் பணி அவ்வளவு சிறப்பானது. மக்களுக்கு அணுக்கமாகவும், நெருக்கமாகவும் வாழ்ந்தவர்களின் இடம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தெளிவாக வரலாற்றை பின் தொடர்வதில் சதீஷ் சந்திரா முன்னணியில் நிற்கிறார்.

தவிக்க விடாமல் அடுத்தடுத்து பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் வேட்டை எஸ். கண்ணன் மொழிபெயர்த்திருக்கிறார். அதனால் புத்தகத்தின் உள் நுழைவு எளிதாகிறது. பேரரசர்கள், குறுநில மன்னர்கள், அவர்களின் வினோதங்கள், மனோபாவம், சீர்திருத்தங்கள் எல்லாமே 480 பக்கங்களில் பரவிக் கிடக்கிறது.

நூல் மொத்தமும் இருக்கிற சம்பவங்களில் வாழ்வியல் சித்திரங்கள் பளிச்சிடுகின்றன. எப்போதுமே முன்னோர்களின் சரித்திரம் வசீகரமானது என்பதன் சான்றே இந்தப் புத்தகம். இவ்வகை புத்தகங்கள் ஆவணப் பதிப்பாக மாறிவிடக்கூடிய அபாயம் நிகழ்ந்திருக்கிறது. நல்லவேளையாக அப்படி நிகழவில்லை.

நன்றி: குங்குமம், 26/5/2017.

Leave a Reply

Your email address will not be published.