ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன்
ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன், கல்யாணி ஸ்ரீதரன், சார்யன் பதிப்பகம், பக். 404, விலை 300ரூ.
திருவரங்கம் பெரிய கோவிலின் சிறப்புகளையும், அக்கோவில் குறித்த அனைத்துச் செய்திகளையும் இந்த நூல் தொகுத்துக்கூறுகிறது. திருவரங்கம் செல்வோர், இந்த நூலைப் படித்துவிட்டுச் சென்றால், மிகவும் பயனடைவர். நூலில் திருவரங்கம் கோவிலின் அமைப்பு, மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.(பக். 30-50). ஆழ்வார்கள் காவிரி குறித்துப் பாடியுள்ள பாசுரங்களை மிக விரிவாக விளக்கிக் காட்டுவதும் (பக். 60-68), சோலைகள், பூம்பொழில்களின் விளக்கமும் (பக். 69 -77), ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக, அரங்கனின் குணங்களையும், பெருமைகளையும் விளக்குவதும் (பக். 97-252), கோவிலின் அனைத்து விழாக்களையும் ஒன்று விடாமல் விளக்குவதும் (பக். 260-291), அங்குள்ள சப்த பிரகாரங்களின் விளக்கமும் (பக். 310-327), நூலாசிரியரின் ஆய்வுத் திறனுக்கு எடுத்துக்காட்டுகள். பின்னிணைப்பில், கோவில் நிர்வாகத்தின் பத்துக் கொத்துக்களின் விளக்கமும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அரங்கன் குறித்துப் பாடியுள்ள பாசுரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 27/3/2016.